Sunday, May 10, 2015

நாங்கள் சாதிக்க பிறந்த கட்சி !!!

எங்களை சாதிக்கட்சி என்று சொல்லும் அருமை தாயாதிகளுக்கு:
நாங்கள் உண்மையில் தமிழகத்தின் அனைத்து சாதியினரும் சமமாக பிரதிநிதித்துவம் பெற்று இருக்கும் கட்சி அதனால் எங்களை சாதிக்கட்சி என்று சொல்கிறிர்களா?
நீங்கள் டில்லிக்கு காவடி தூக்குவதிலும் கூட்டணி கட்சிகளிடம் கட்சியை தொடர்ந்து அடகு வைத்து நீங்கள் சுகவாசிகளாக வாழ்வதற்காக கட்சியை கடை நிலைக்கு கொண்டுவந்தது பொறுக்காமல் காலத்தால் காமராஜர் ஆட்சி என்பது கனவாகிவிடக்கூடாது என்று தொடங்கப்பட்ட பேரியக்கம் சாதிக்கட்சி என்றால் குஷ்புவை வைத்துக்கொண்டு கூத்தாடி நாடகம் நடத்தும் நீங்கள்?
இந்த கட்சியில் தான் 90 வயதை கடந்த தியாகி முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதியும்,  பாரமலையும், எஸ்.ஆர்.பி யும்,  முனைவர் பிச்சை யும் காமராஜரை வழி ஒற்றி வந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களும் சாதிக்கட்சியின் அங்கத்தினரா?
மக்கள் தலைவரை அன்னை இந்திராவும் , அமரர் ராஜிவும், அன்னை சோனியாவும் மற்றும் இந்தியதேசத்தின் பெரும் தலைவர்களும் மூப்பனார் என்று தான் அழைத்தார்கள் அதுவே அவர் காலத்தில் தொடங்கப்பட்ட எங்கள் இயக்கத்திலும் நிலைத்துவிட்டது ஏன் காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸாகவும் இந்திரா காங்கிரஸாகவும் இருந்தது உங்களுக்கு தெரியாதா?
உங்கள் லட்சியங்களை நீங்கள் மறந்துவிட்டீர்கள் நாங்கள் அதை முன்னேடுக்கிறோம் எனது சந்தேகம் இப்போது ஒன்று தான் உண்மையில் நீங்கள் எங்களை எதிர்க்கிறீர்களா இல்லை காமராஜர் ஆட்சியை கொண்டுவர துடிக்கும் எங்கள் லட்சியத்தை எதிர்க்கிறீர்களா?
உண்மையில் நாங்கள் சாதிக்க பிறந்த கட்சி

குஷ்புசெய்த தியாகம் அல்லது சேவை என்ன?

காமராஜர் காலத்திலிருந்து கட்சிக்காக பாடுபடும் குமரியாரையும் யசோதா அவர்களையும் பின்னுக்கு தள்ளி இடம் பிடிக்கும் அளவிற்கு காங்கிரஸிற்க்கு அல்லது இளங்கோவனுக்கு குஷ்புசெய்த தியாகம் அல்லது சேவை என்ன பங்காளிகளே ஆனால் நான் வருந்தும் அளவிற்கு கூட அவர்கள் இருவரும் வருந்தவில்லை போல அதே மேடையில் சிரித்துக்கொண்டு நிற்க்கிறார்கள். 128 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க  இயக்கம் சத்தியமூர்த்தியும்,  காமராஜரும், வ.உ.சியும், தமிழ்தென்றல் திரு.வி.கவும், கக்கனும், ராஜாஜியும், பாரதியும், கல்கியும், ஜெயகாந்தனும், மக்கள் தலைவரும், சி. சுப்பிரமணியமும், பக்தவத்சலமும், ஒ.வி. அலகேசனும், ராமசாமி ரெட்டியாரும்,  கே.பி. சுந்தராம்பாளும், குமாரசாமி ராஜாவும், செல்லப்பாண்டியனும், பொன்னம்மாளும் வளர்த்த  இயக்கம் இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு ஆட்பட்ட ஒரு நடிகையிடம் கொஞ்சம்கொஞ்சமாக அடகு வைக்கப்படுகிறது கட்சியின் மூத்ததலைவர்களுக்கு தரப்படாத மரியாதை இவருக்கு தரப்படுகிறது உண்மையில் இதை எப்படி சகித்திருக்கிறார்கள் அந்த மூத்தவர்கள் என்று தெரியவில்லை எல்லாவற்றிர்க்கும்  காரணம் பதவி ஆசைதானா அப்படித்தான் இருக்கும் வேறேன்ன

என் தலைவன்

என் தலைவனை முகஸ்துதிக்காகவாவது வானளாவ புகழாதவனும் என் தலைவனால் ஆதாயம் அடையாதவனும்தமிழக  காங்கிரஸில் இல்லை இதைமறுப்பவர் யார்?

Saturday, April 25, 2015

பொதுக்குழுவில் நண்பர்களுடன்




தமிழ் மாநில காங்கிரஸின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நானும் ஒரு பொதுக்குழு உறுப்பினராக பங்கேற்றது என் வாழ்வின் மிக முக்கிய தருணங்களுள் ஒன்று அதற்கு நான் முதழில் எனக்கு அவ் வாய்ப்பை ஏற்படுத்திக்  கொடுத்த சமூக ஊடக பொறுப்பாளர்கள் திரு விஜய் ஞானதேசிகன் அவர்களுக்கும் எனது நண்பர் திரு டாக்டர் பாலமுருகன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பொதுக்குழுவில் எனது நீண்டநாளைய நண்பர்களையும் சகோதரர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிகுறிப்பாக வடலூர் அன்பு, தக்க்ஷா ஐயப்பன் சுருளிராஜன் , மற்றும் சுவாமிமலை சங்கர் என் தம்பிகள் மனோஜ் ஜோஷ்வா புஷ்பா நகர் அன்பு, மேஷாக், ஆலந்தூர் வினோத்மற்றும் சரவணன் ஆகியோருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்

Social Media workers are Recognised in TMC in a great manner by Ayya G. K. Vasan


த.மா.கா வில் சமூக ஊடகக்குழுக்கு ( Social media ) முக்கியக்துவம்

நன்பர்களே இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஊடகக்குழுக்கு அங்கிகாரம் வழங்கி அவர்களை கௌவரவப்படுத்திய இயக்கம் நம் இயக்கம் தான்
ஓரு கட்சியின் கொள்கை பரப்புவதில்
சமூகத்திற்கு மிக முக்கியமான தூணாக விளங்குவது ஊடகம். இது வெறும் நிகழ்வுகளை மட்டும் அறிவிப்பதில்லை, மாறாக பொதுவான கருத்தினை உருவாக்குகிறது.
இதுவே ஊடகத்தை ஜனநாயகத்தில் ஒரு அதிகாரம் உள்ள ஒன்றாக ஆக்கியுள்ளது.
எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கே அதனைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
சில நாடுகளில் மிகுந்த சக்தி வாய்ந்த ஊடகம் வாயிலாக - மனிதர்களையும், நிகழ்வுகளையும் ஒரு குறிப்பிட்ட வழியில் காட்டுவதன் மூலம், தேர்தல் முடிவுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் கூட  அண்மையில் ஊடகத்தின் முக்கியமானவர்களுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமூக ஊடகம் தோன்றியவுடன் முன்பிருந்த ஊடகம் வெகுவாக மாறியது. சமூக ஊடகம் வாயிலாக பொதுமக்களுக்கு எங்கும் கண்களும் காதுகளும் ஏற்பட்டு உள்ளன.
தொலைக்காட்சியின் சில சானல்களில் புகைப்படக் குழுவின்  தகவல்களுடன், அவர்கள் நின்று விடவில்லை.
எளிதில் போதனைகளாக ஏற்றுக்கொள்ள முடியாத ,  பொதுமக்களின் அபிப்ராயங்களை காட்டவல்ல மாபெரும் மேடையாக சமூக ஊடகம்  மாறி உள்ளது.
சமூகத்தின் நாடித் துடிப்பை பிரதிபலிக்க வல்லதாக உள்ளது.
பண்டைய சிறப்பு வாய்ந்த ஊடகத் தொலைக்காட்சித் தடங்கள் கூட தற்போதைய  சமூக ஊடகங்களின் பால்  கவனமாக உள்ளது.
இவ்வாறாக முக்கியத்துவம் வாய்ந்த சமுகஊடக்குழுக்கு அங்கிகாரம் அளித்து
த.மா.கா.வில் சுமார் 25 பேருக்கு மாநில அந்தத்து வழங்கி அதாவது மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவி வழுங்கி பல அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது..

தமிழ் மாநில காங்கிரஸ் முதல் பொதுக்குழு




 
த.மா.கா.வின் முதல் பொதுக்குழு கூட்ட சில நிகழ்வுகள்.
* த.மா.கா.வின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் இன்று நடந்தது.
* இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் பேருக்கு தனித்தனியே அழைப்பிதழ்களை தலைவர் வாசன் அனுப்பி இருந்தார்.
* த.மா.கா.வின் முதல் பொதுக்குழு என்பதால் தொண்டர்கள் உற்சாகமாக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
* மாநிலம் முழுவதிலும் இருந்து நேற்று இரவே சென்னைக்கு தொண்டர்கள் வர தொடங்கினார்கள்.
* கார், வேன்களில் தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர்.
* இன்று காலை 9 மணி முதல் பொதுக்குழு கூடிய அரங்கத்துக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
* அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கவுண்டர்களில் ரூ.500 செலுத்தி பொதுக்குழு உறுப்பினர்களாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.
* சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டில் இருந்து வானகரம் வரை த.மா.கா. கொடி, பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன.
* கோயம்பேட்டில் இருந்து வானகரம் வரை ரோட்டின் இருபுறமும் பிரமாண்டமான வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
* பகல் 12 மணிக்கு ஜி.கே.வாசன் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தார்.
* வழி நெடுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
* பூந்தமல்லி ரோட்டில் இருந்து ஸ்ரீவாரு மண்டபம் வரை திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தலைவர் ஜி.கே.வாசன் வந்த வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது.
* மேள தாளங்களுடன் உற்சாகமாக தொண்டர்கள் அழைத்து வந்தனர்.
* மண்டப வாயிலை நெருங்கியதும் அதிர்வேட்டுகள் காதை பிளந்தன. ‘மக்கள் தளபதி வாழ்க’, ‘வருங்கால தமிழகம் வாழ்க’ என்று தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினார்கள்.
* தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட தலைவர் ஜி.கே.வாசன் 12.05 மணிக்கு பொதுக்குழு அரங்கத்துக்கு வெளியே த.மா.கா. கொடியை ஏற்றி வைத்தார்.
* அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.கூட்டம் தொடங்கியதும் 12.15 மணிக்கு கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை ஞானதேசிகன் வெளியிட்டார்.
* அதைத் தொடர்ந்து அய்யா ஜி.கே.வாசன் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார்.
* வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் ஜி.கே.வாசன் த.மா.கா. தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
* இதற்கான அறிவிப்பை ஞானதேசிகன் வெளியிட்டார். உடனே பொதுக்குழு உறுப்பினர்கள் பலத்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பினார்கள்.
* அதைத் தொடர்ந்து புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜி.கே.வாசனை வாழ்த்தி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், மகேஸ்வரி, கோவை தங்கம் உள்பட பலர் பேசினார்கள்.
* அதை தொடர்ந்து கட்சியின் செயல் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* அதன் பிறகு தலைவர் ஜி.கே.வாசன் பொதுக்குழுவில் உரையாற்றினார்.
* இந்த பொதுக்குழுவில் திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஆ.ஞானசேகரன், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.


Tuesday, April 21, 2015

ஒரு நாள் ஒரு நட்சத்திரம் - தந்தி தொலைக்காட்சி

ஒரு நாள் ஒரு நட்சத்திரம் - தந்தி தொலைக்காட்சி மக்கள் தலைவர் அய்யா ஜி.கே . வாசன்
தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி இடைவிடாத நெடிய பயணத்தின் ஒரு நாளின் முக்கிய பகுதிகளை தொகுத்தளித்து இருக்கிறார்கள் தந்தி தொலைக்காட்சிக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்