Sunday, May 10, 2015

குஷ்புசெய்த தியாகம் அல்லது சேவை என்ன?

காமராஜர் காலத்திலிருந்து கட்சிக்காக பாடுபடும் குமரியாரையும் யசோதா அவர்களையும் பின்னுக்கு தள்ளி இடம் பிடிக்கும் அளவிற்கு காங்கிரஸிற்க்கு அல்லது இளங்கோவனுக்கு குஷ்புசெய்த தியாகம் அல்லது சேவை என்ன பங்காளிகளே ஆனால் நான் வருந்தும் அளவிற்கு கூட அவர்கள் இருவரும் வருந்தவில்லை போல அதே மேடையில் சிரித்துக்கொண்டு நிற்க்கிறார்கள். 128 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க  இயக்கம் சத்தியமூர்த்தியும்,  காமராஜரும், வ.உ.சியும், தமிழ்தென்றல் திரு.வி.கவும், கக்கனும், ராஜாஜியும், பாரதியும், கல்கியும், ஜெயகாந்தனும், மக்கள் தலைவரும், சி. சுப்பிரமணியமும், பக்தவத்சலமும், ஒ.வி. அலகேசனும், ராமசாமி ரெட்டியாரும்,  கே.பி. சுந்தராம்பாளும், குமாரசாமி ராஜாவும், செல்லப்பாண்டியனும், பொன்னம்மாளும் வளர்த்த  இயக்கம் இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு ஆட்பட்ட ஒரு நடிகையிடம் கொஞ்சம்கொஞ்சமாக அடகு வைக்கப்படுகிறது கட்சியின் மூத்ததலைவர்களுக்கு தரப்படாத மரியாதை இவருக்கு தரப்படுகிறது உண்மையில் இதை எப்படி சகித்திருக்கிறார்கள் அந்த மூத்தவர்கள் என்று தெரியவில்லை எல்லாவற்றிர்க்கும்  காரணம் பதவி ஆசைதானா அப்படித்தான் இருக்கும் வேறேன்ன

No comments:

Post a Comment