கடந்த 43 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதால், தமிழகத்தில் முதல் நிலையை அடையும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை உதகை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். சென்னை துறைமுகத்தில் ரூ. 3,686 கோடி செலவிலான் மெகா கன்டெய்னர் டெர்மினல் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் 2013-ம் ஆண்டிலும் 2-ம் கட்டப் பணிகள் 2017-ம் ஆண்டிலும் முடியும்.ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.100 கோடி செலவில் 125 ஏக்கர் பரப்பில் உலர் துறைமுகம் அமையும். இதற்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் 110 கோடி செலவில் 3 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்யும் வகையிலான பல்முனை பயன்பாட்டு முனையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.2004-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி மாற்றங்கள் ஏதும் இருந்தால் அதை சோனியாதான் முடிவு செய்வார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முழுமையான ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்துவது அவதூறாகும். நீதிமன்றமும் சட்டமும் இருக்கின்றன. எனவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மை விரைவில் வெளிவரும்43 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. விரைவில் முதல் நிலையை அடைய வாய்ப்பு இருக்கிறது.தென் தமிழக மக்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
Wednesday, November 17, 2010
தமிழகத்தில் காங்கிரஸ் முதல் நிலையை அடையும்: ஜி.கே.வாசன்
கடந்த 43 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதால், தமிழகத்தில் முதல் நிலையை அடையும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை உதகை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். சென்னை துறைமுகத்தில் ரூ. 3,686 கோடி செலவிலான் மெகா கன்டெய்னர் டெர்மினல் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் 2013-ம் ஆண்டிலும் 2-ம் கட்டப் பணிகள் 2017-ம் ஆண்டிலும் முடியும்.ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.100 கோடி செலவில் 125 ஏக்கர் பரப்பில் உலர் துறைமுகம் அமையும். இதற்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் 110 கோடி செலவில் 3 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்யும் வகையிலான பல்முனை பயன்பாட்டு முனையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.2004-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி மாற்றங்கள் ஏதும் இருந்தால் அதை சோனியாதான் முடிவு செய்வார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முழுமையான ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்துவது அவதூறாகும். நீதிமன்றமும் சட்டமும் இருக்கின்றன. எனவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மை விரைவில் வெளிவரும்43 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. விரைவில் முதல் நிலையை அடைய வாய்ப்பு இருக்கிறது.தென் தமிழக மக்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment