Wednesday, November 17, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலைகளும் மக்கள் தளபதி அய்யாவும்



இன்றைய அரசியல் சூழ்நிலைகளும் மக்கள் தளபதி அய்யாவும்

நம் மக்கள் தளபதி அய்யா அவர்கள் நம் இதயங்களில் வாழும் மக்கள் தலைவர் அய்யா அவர்களின் மறைவிற்கு பின் அனைவரது ஏகோபித்த ஆதரவுடன் ஒருமனதாக தமிழ் மாநில காங்கிரஸின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார் அய்யா அவர்கள் அப்போது வெறும் முப்பத்தி ஐந்தே வயது நிறைந்தவர் ஆவார்அது நாள் வரையிலும் எந்த நேரடி அரசியலிலும் ஈடு படாமல் மக்கள் தலைவரின் பின்புலமாக மட்டுமே இயங்கி வந்த நம் அய்யா அவர்களின் தோள்களில் தமிழ் மாநில காங்கிரஸ் என்னும் பேரியகத்தையும் அதை காத்துநிற்கும் லட்ச கணக்கான தொண்டர்களையும் அவர்களின் நல்வாழ்வையும் சுமக்கின்ற பெரிய பொறுப்பு நம் அய்யா அவர்களின் தோள்களில் விழுந்தது மக்கள் தலைவர் அய்யா அவர்கள் வளர்த்தெடுத்த இயக்கம் தன்மானத்திற்கு ஒரு சிறு நெருடல் ஏற்பட்டபோது மானம் பெரிதென்று மக்கள் தலைவரால் தொடங்கப்பட்டு இன்று தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கின்ற சக்தியாக வளர்ந்து நின்ற இயக்கம் இனி கட்டிகாக்க ஆல் அற்று சிதறும் என்ற விமர்சனங்களை புறம் தள்ளி மக்கள் தலைவரின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை தன் ஆளுமையால் நிரப்பினார் நம் மக்கள் தளபதி அய்யா அவர்கள் காமராஜரின் மரணத்திற்கு பின் உண்டான இதே போன்றதோர் வெற்றிடத்தை முன்னர் வெற்றி கரமாய் நிரப்பியவர் நம் மக்கள் தலைவர் அய்யா அவர்கள் புலியின் பிள்ளை பூனை ஆகுமா ஆதலினால் தான் நம் மக்கள் தளபதி அவர்கள் தன் மீது எழுந்த விமர்சனங்களை பொய்யாக்கி தன்னை இன்று தமிழகத்தில் காங்கிரஸின் தன்னிகரற்ற தலைவராக நிலைநிறுத்த முடிந்தது அய்யா அவர்கள் தலைமை பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தலை ஆ தீ மு க கூட்டணியுடன் எதிர் கொண்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து கூட்டணியை வெற்றிபெற செய்தார் பின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுபயணம் மேற்கொண்டு தொண்டர்களிடம் உரையாடி மனநில்யை அறிந்து கட்சியை திறன்பட வழிநடத்தினார் அய்யா அவர்களுக்கு தலைமை பொறுப்பு மலர் பாதையாக இல்லை மாறாக முற்களும் துரோகிகளும் நிறைந்த பாதை தான் இருந்தது பின் மக்கள் தலைவரின் ஆசை படி அன்னை சோனியா காந்தி அவர்களின் முன்னிலையில் மதுரையில் நடைபெற்ற மிக பிரமாண்ட விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது அதன் பின் மக்கள் தளபதி அவர்களின் பங்களிப்பும் எந்த ஒரு எதிர்பார்பும் அற்ற எண்ணற்ற தொண்டர்களின் உழைப்பாலும் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் உயிர் பெற்றது மக்கள் தளபதி அய்யா அவர்கள் காங்கிரஸ் அகில இந்தியா செயலாளராக பணியாற்றினார் பின் தமிழகத்தில் காங்கிரசை புத்துயிர் ஊட்ட தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டார் அய்யா அவர்கள் தலைவரை பணியாற்றிய மூன்று ஆண்டுகளும் தமிழகத்தில் காங்கிரஸ் மிக சிறந்த முறையில் செயல் பட்டது அதன் பின் தொண்டர்பலமற்ற காவடி தூக்கி கும்பலால் நம்அணி பின் தளபட்டோம் ஆனால் மக்கள் கடந்த தேர்தலில் அந்த பதர்களுக்கு நல்ல பாடம் புகட்டி விட்டார்கள் அதன் பின் தான் அகில இந்திய தலைமையும் நம் அய்யாவின் பலத்தை உணர்ந்து கப்பல் போக்குவரத்து அமைச்சராகி அழகுபடுத்தி இருக்கிறது இனி நம் மக்கள் தளபதி அய்யா அவர்கள் சுட்டி கட்டும் ஒருவரை தமிழகத்தின் தலைவராய் நியமித்தல் நம்மால் மீண்டும் காமராஜர் அட்சி என்னும் கனவை எட்ட முடியும்
வளமான தமிழகம்
வலிமையான பாரதம்

No comments:

Post a Comment