Wednesday, December 15, 2010

“ராஜீவ்காந்தியை கொலை செய்தது மிகப் பெரிய தவறு” விடுதலைப்புலிகள் மீது கருணா கடும் தாக்கு

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கமாண்டராகவும் இருந்தார்.

பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தார். தற்போது அவர் இலங்கை அரசின் மறு சீரமைப்பு துறை துணை மந்திரியாக உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இறுதி கட்ட போரின் போது நடந்த உண்மைகளை கண்டறியும் குழுவையும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு சீரமைக்க கமிஷனையும் இலங்கை அரசு அமைத்துள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை விடுலைப்புலிகள் கொலை செய்தது மிகப்பெரிய தவறு. அதுதான் அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது. அவரது கொலையை தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்தது.
கடந்த 2002-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால், அமைதிநிலை ஏற்படவில்லை. மாறாக ராணுவ பலவீனத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
மேலும், நார்வே அரசு மற்றும் தமிழர்மறுவாழ்வு அமைப்பு போன்ற தமிழ் அமைப்புகள் நன்கொடையாக வழங்கிய பணத்தை ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தினர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, மைனாரிட்டியாக வாழும் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணவேண்டும். அதே நேரத்தில் மகாண கவுன்சிலுக்கு போலீஸ் அதிகாரம் தேவையில்லை. அது மெஜாரிட்டியாக வாழும் சிங்களர்கள் மத்தியில் ஐயப்பாட்டை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment