அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் நாடாளுமன்றத்தை முடக்கும் நடவடிக்கை ஜனநாயக விரோதம் எனக் குற்றஞ்சாட்டினார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: ""இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக தேசத்தின் மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பான பாராளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தயாராகவே இருக்கிறது. பல முறை இதை பிரதமர் மன்மோகன்சிங்கும் எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்ற மத்திய நிதி அமைச்சர் பிரணப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்துவிட்டனர். ஆனால், எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் மக்களவை, மாநிலங்களவையை மதித்து நடக்க அவர்கள் தயாராக இல்லை. பிரச்னைகுறித்து பேசுவும் விவாதிப்பதற்கும் உரிய முடிவுகள் எடுப்பதற்கும் உள்ள மக்கள் மன்றம் அது. ஆனால், இந்தப் பிரச்னை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. பாராளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்குவதிலேயே அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்தப் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி மூத்த உறுப்பினர் தலைமையில் பாராளுமன்றச் செயலாக்க (பி.ஏ.சி.) விசாரணை நடத்தப்படுகிறது. மத்தியப் புனாய்வுத் துறை விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழு கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை விசாரணை மேற்கொள்ளும் எனவும் 4 வாரத்திற்குள் அந்த விசாரணையின் முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வளவுக்கும் பிறகு எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் தொடர்ந்து நடத்தவிடாமல் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணித்தது வரும் நிலைப்பாடு ஜனநாயக விரோதம்'' என்றார் வாசன். பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் தி. புஷ்பராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சி. சாமிநாதன், ஜெ. முஹம்மதுகனி, நகர்மன்ற உறுப்பினர் ஜி. ஆறுமுகம், நிர்வாகிகள் வயி.ச. வெங்கடாசலம், கூகூர் சண்முகம், பூமாராமசாமி, ஆர்.எல். தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sunday, December 12, 2010
எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு ஜனநாயக விரோதம்: வாசன்
அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் நாடாளுமன்றத்தை முடக்கும் நடவடிக்கை ஜனநாயக விரோதம் எனக் குற்றஞ்சாட்டினார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: ""இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக தேசத்தின் மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பான பாராளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தயாராகவே இருக்கிறது. பல முறை இதை பிரதமர் மன்மோகன்சிங்கும் எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்ற மத்திய நிதி அமைச்சர் பிரணப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்துவிட்டனர். ஆனால், எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் மக்களவை, மாநிலங்களவையை மதித்து நடக்க அவர்கள் தயாராக இல்லை. பிரச்னைகுறித்து பேசுவும் விவாதிப்பதற்கும் உரிய முடிவுகள் எடுப்பதற்கும் உள்ள மக்கள் மன்றம் அது. ஆனால், இந்தப் பிரச்னை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. பாராளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்குவதிலேயே அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்தப் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி மூத்த உறுப்பினர் தலைமையில் பாராளுமன்றச் செயலாக்க (பி.ஏ.சி.) விசாரணை நடத்தப்படுகிறது. மத்தியப் புனாய்வுத் துறை விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழு கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை விசாரணை மேற்கொள்ளும் எனவும் 4 வாரத்திற்குள் அந்த விசாரணையின் முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வளவுக்கும் பிறகு எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் தொடர்ந்து நடத்தவிடாமல் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணித்தது வரும் நிலைப்பாடு ஜனநாயக விரோதம்'' என்றார் வாசன். பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் தி. புஷ்பராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சி. சாமிநாதன், ஜெ. முஹம்மதுகனி, நகர்மன்ற உறுப்பினர் ஜி. ஆறுமுகம், நிர்வாகிகள் வயி.ச. வெங்கடாசலம், கூகூர் சண்முகம், பூமாராமசாமி, ஆர்.எல். தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment