Saturday, December 3, 2011

கனிமொழியின் ஜாமீன்

கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆன கனிமொழி உலக புகழ் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ஆறு மாத சிறை தண்டனைக்கு பின் டெல்லி உயர்நீதி மன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று இன்று முதன் முதலாக சென்னை வந்தார். ஜாமீனில் வெளியில் வந்த கனிமொழிக்கு தாரை, தப்பட்டை முழங்க ஆரவாரமான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது என்ற செய்தி நிச்சயமாக எந்த ஒரு குடிமகனுக்கும் ஏன் தி.மு.க வை சேர்ந்தவர்களுக்கு கூட நிச்சயமாக ஒரு அருவருப்பான செயலாக தான் பட்டிருக்கும், சிறையிலிருந்து வந்திருக்கும் கனிமொழி ஏதோ தியாக வேங்கையாக சித்தரிக்க படுவதும் ஏதோ ஓர் ஒப்பற்ற தியாகத்திற்காக நோக்கத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டது போலவும் சிறையிலே ஏதோ அவர் சொல்லொணா துயரமும், கொடும் துன்பமும் அனுபவிப்பதை போலவும் சில நாட்களாக ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளும் செய்திகளும் கட்டுரையும் பேட்டியும் வெளியிட்டும் வந்தன. கனிமொழி ஜாமீனில் வந்தவுடன் கட்சியில் உயரிய பதவியும் மத்திய அமைச்சராகுவார் என்றெல்லாம் ஆருடம் சொல்லி வந்தன, இதோ இன்று சென்னைக்கு வந்து விட்டார் அவருக்கு வரலாற்றில் கேவலமான செயலாக குறிக்கும் வண்ணம் ஒரு வரவேற்ப்பும் வழங்க பட்டுவிட்டது இதையும் இந்த மானம்கெட்ட ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு தங்கள் விசுவாசத்தை காட்டி வருவதும் எந்த விதத்திலும் நியாய படுத்த முடியாத ஈன செயல்கள் ஆகும், இத்தனைக்கும் கனிமொழி வந்திருப்பது ஜாமீனில் தான் அவர் மேல் இன்னும் விசாரணை முடிந்துவிடவும் இல்லை அவர் இன்னும் குற்றமற்றவர் என்று நிரூபிக்க படவும் இல்லை ஆனால் இன்று சென்னை முழுவதும் தியாக திருவிளக்கே என்றெல்லாம் போஸ்டர்கள் ஓட்ட பட்டிருக்கின்றன இந்த அவலங்களை எல்லாம் எப்படி இந்த ஊடகங்கள் கண்மூடி, வாய் பொத்தி, கூனி, குறுகி ரசிக்கின்றன என்பது தான் விளங்கவில்லை இதற்கு சற்றும் குறைவில்லாதது சொத்துகுவிப்பு வழக்கில் ஆஜர் ஆக பெங்களூரு சென்ற ஜெயலலிதாவிற்கு ரத்தத்தின் ரத்தங்கள் தந்த வரவேற்ப்பு.
நாட்டின் விடுதலை வேள்வியிலே தன் உடல் பொருள் ஆவி அத்தனையையும் தியாகம் செய்த தியாகிகள் சிறை மீண்ட போது கூட இப்படி நடந்ததில்லை ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை சென்று திரும்பும் கனிமொழிக்கும் ஊழல் பணத்தில் சொத்து வாங்கி குவித்து இன்று விசாரணைக்கு செல்லும் ஜெயலலிதாவிற்கும் இன்று அளிக்க படும் வரவேற்பு நிச்சயமாக திராவிட கட்சிகளால் தமிழருக்கும் தமிழகத்திற்கும் ஏற்பட்ட வரலாற்று களங்கம் இவற்றை கண்டனம் செய்யாமல் இருப்பதே தவறு அனால் இதை ஏதோ பெரும் சாதனை நிகழ்ந்ததை போல் செய்தி வெளியிடும் ஊடகங்கள் தான் இந்த சமுதாயத்தை சீரழித்து மக்களை சொரணை அற்றவர்களாக மழுங்கடித்த குற்றத்தை செய்தவர்கள்

No comments:

Post a Comment