கட்சியின் 127-வது ஆண்டுவிழாவை நெஞ்சை நிமிர்த்தி, தலைநிமிர்த்தி சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 1885 ஆம் ஆண்டு தொடங்கிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கு 126 வயது முடிந்து 127 ஆம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது. உலக அரசியல் வரலாற்றில் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கின்ற அரசியல் இயக்கம் காங்கிரஸ் ஒன்று தான்.மகாத்மா காந்தி, பண்டித நேரு, இந்திரா காந்தி, நேதாஜி, பாலகங்காதர திலகர், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், தந்தை பெரியார் போன்று இந்தியத் திருநாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற தலைவர்களை இந்நாட்டின் சுதந்திரப் போர்க்களத்திற்கு - நாட்டை வழிநடத்துவதற்கு தந்த இயக்கம் காங்கிரஸ்.இன்னும் எண்ணற்ற தியாகிகள் தியாகங்கள் பல புரிந்து தங்களையே இழந்து இன்றைக்கு மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தர தலமாக அமைந்தது காங்கிரஸ் பேரியக்கம்.சுதந்திரத்திற்குப் பிறகு இந்த தேசத்தை வழிநடத்திய நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, இன்றைக்கு மன்மோகன்சிங் தலைமையிலான மைய அரசை வழிநடத்திக் கொண்டிருக்கும் சோனியா காந்தி வரை உள்ள இந்த இயக்கத்தின் நீண்ட வரலாறு நாமெல்லாம் பெருமை கொள்ளக் கூடிய வரலாறு.இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும், மீண்டும் நமது இயக்கத்தை தமிழகத்தின் உன்னதமான முதல் இயக்கமாக மாற்ற வேண்டிய கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.இதை நினைவில் கொண்டு காங்கிரஸ் பேரியக்கம் வருகிற 28-ந் தேதி 127-வது ஆண்டில் கால் வைக்கிற அன்று மாநகராட்சிகள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் கொடி ஏற்றி வைத்து இந்த இயக்கத்தின் உன்னத வரலாற்றையும், தலைவர்களின் தியாகத்தையும், காங்கிரஸ் அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு நிறைவேற்றி வருகிற திட்டங்களையும் மக்கள் மத்தியில் நினைவுறுத்த வேண்டும் என்பதோடு, நான் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் என்ற பெருமிதத்தோடு நெஞ்சை நிமிர்த்தி, தலைநிமிர்த்தி அந்நன்னாளை கொண்டாடிட வேண்டுமென்று அனைத்துகாங்கிரஸ் நண்பர்களையும் அன்புடன் வேண்டுகிறேன்.
Monday, December 26, 2011
காங்கிரஸ் கட்சியின் 127-ம் ஆண்டுவிழா: ஞானதேசிகன் வேண்டுகோள்
கட்சியின் 127-வது ஆண்டுவிழாவை நெஞ்சை நிமிர்த்தி, தலைநிமிர்த்தி சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 1885 ஆம் ஆண்டு தொடங்கிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கு 126 வயது முடிந்து 127 ஆம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது. உலக அரசியல் வரலாற்றில் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கின்ற அரசியல் இயக்கம் காங்கிரஸ் ஒன்று தான்.மகாத்மா காந்தி, பண்டித நேரு, இந்திரா காந்தி, நேதாஜி, பாலகங்காதர திலகர், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், தந்தை பெரியார் போன்று இந்தியத் திருநாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற தலைவர்களை இந்நாட்டின் சுதந்திரப் போர்க்களத்திற்கு - நாட்டை வழிநடத்துவதற்கு தந்த இயக்கம் காங்கிரஸ்.இன்னும் எண்ணற்ற தியாகிகள் தியாகங்கள் பல புரிந்து தங்களையே இழந்து இன்றைக்கு மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தர தலமாக அமைந்தது காங்கிரஸ் பேரியக்கம்.சுதந்திரத்திற்குப் பிறகு இந்த தேசத்தை வழிநடத்திய நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, இன்றைக்கு மன்மோகன்சிங் தலைமையிலான மைய அரசை வழிநடத்திக் கொண்டிருக்கும் சோனியா காந்தி வரை உள்ள இந்த இயக்கத்தின் நீண்ட வரலாறு நாமெல்லாம் பெருமை கொள்ளக் கூடிய வரலாறு.இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும், மீண்டும் நமது இயக்கத்தை தமிழகத்தின் உன்னதமான முதல் இயக்கமாக மாற்ற வேண்டிய கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.இதை நினைவில் கொண்டு காங்கிரஸ் பேரியக்கம் வருகிற 28-ந் தேதி 127-வது ஆண்டில் கால் வைக்கிற அன்று மாநகராட்சிகள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் கொடி ஏற்றி வைத்து இந்த இயக்கத்தின் உன்னத வரலாற்றையும், தலைவர்களின் தியாகத்தையும், காங்கிரஸ் அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு நிறைவேற்றி வருகிற திட்டங்களையும் மக்கள் மத்தியில் நினைவுறுத்த வேண்டும் என்பதோடு, நான் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் என்ற பெருமிதத்தோடு நெஞ்சை நிமிர்த்தி, தலைநிமிர்த்தி அந்நன்னாளை கொண்டாடிட வேண்டுமென்று அனைத்துகாங்கிரஸ் நண்பர்களையும் அன்புடன் வேண்டுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment