ஜன்லோக்பால் மசோதா குறித்த ஹசாரேவின் மதிப்பீடு மிகுதியானது: திக்விஜய் சிங்
புதுதில்லி, நவ.7: ஜன்லோக்பால் மசோதா பெரிதாக சாதித்துவிடும் என அண்ணா ஹசாரே அதுகுறித்து அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்துவைத்துள்ளார் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறினார்.ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாக மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. அரசு, போலீஸ், நீதித்துறை மற்றும் அரசு உயர்அதிகாரிகள் என அனைவரும் இணைந்து ஒரு செயல்திட்டத்தை வகுப்பதன்மூலமே ஊழலை ஒழிக்க முடியும் என திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.லோக்பால் மசோதாவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வலிமையான லோக்பால் மசோசாவை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என திக்விஜய் மேலும் தெரிவித்தார்.மேலும் ஊழலுக்கு எதிரான ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் யாத்திரையை வரவேற்கிறோம். அவருடன் யார் இருக்கப் போகிறார்கள். ஊழல் குறித்து அவர் என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்கத்தான் போகிறோம் என திக்விஜய் சிங் கூறினார்.
No comments:
Post a Comment