Thursday, January 27, 2011

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர்; ஜி.கே.வாசன் அறிவிப்பு


சுதந்திர போராட்ட காலத்தில் வ.உ.சிதம்பரனார் தூத்துக்குடியில் சுதேசி கப்பல் போக்குவரத்தை நடத்தி வந்தார். எனவே அவர் நினைவாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதுசம்பந்தமாக மத்திய அரசு பரிசீலித்தது.
இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் கப்பல் போக்கு வரத்து மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
வ.உ.சிதம்பரனார் பெயரை தூத்துக்குடி துறை முகத்துக்கு சூட்டி இருப்பதால் மக்களிடம் தேசபக்தி, தேச ஒற்றுமையில் மறுமலர்ச்சி ஏற்படும் என நம்புவதாக ஜி.கே.வாசன் கூறினார்.

No comments:

Post a Comment