கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர 5 அம்ச உத்தியை அரசு வகுத்திருப்பதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.1. கறுப்புப் பணத்துக்கு எதிராக உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்திய அரசும் சேருவது,2. கறுப்புப் பணத்தை வெளிக்கொணர உரிய சட்டங்களை இயற்றுவது,3. சட்ட விரோதமாக ஈட்டப்படும் வருவாயைக் கண்டுபிடிக்கவும் அவற்றைப் பறிமுதல் செய்யவும் உரிய துறைகளையும், ஏற்கெனவே உள்ள துறைகளில் புதிய பிரிவுகளையும் உருவாக்குவது,4. கறுப்புப் பணத்தை கண்டுபிடித்து கைப்பற்ற இயற்றிய சட்டங்களையும், ஏற்படுத்திய துறைகளையும் நன்கு பயன்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உரிய நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது,5. இந்தப் பணிகளை விரைவாகவும் சரியாகவும் செய்ய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பயிற்சிகளை அளிப்பது ஆகியவையே அரசின் 5 அம்ச உத்தியாகும் என்றார் பிரணாப் முகர்ஜி.கறுப்புப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடாதது ஏன்? சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தகவல்களைக் கோரிப் பெறவும் உரிய அமைப்பு ரீதியான ஏற்பாடுகளைச் செய்யாமல் வெளிநாடுகளிடமிருந்து, வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை சேமித்து வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றி கிடைத்த தகவல்களை வெளியிட முடியாது என்று முகர்ஜி விளக்கினார்.தகவல் பெற 23 நாடுகளுடன் ஒப்பந்தம்: கறுப்புப் பணம் குறித்து தகவல் பெறுவதற்காகவே, இரட்டை வரி விதிப்பை தடுக்கவும், வரி செலுத்தினார்களா என்று அறிய பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் 23 நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்று தெரிவித்தார்.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது பற்றிய தகவல்களை அறியவும் இரட்டை வரி விதிப்பை தடுக்கும் சட்டத்தின் கீழ் வராத இந்தியர்களைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்கவும் 63 நாடுகளுடன் இந்தியா பேசி வருகிறது என்றார்.சர்வதேச தரத்துக்கு ஏற்ப, இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் வகையில் 13 புதிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் நிலையில் தயாராகிவிட்டன.இந்தத் தகவல்கள் எல்லாமே, நடவடிக்கை பூர்த்தியாகும்வரை வெளியில் கசியவிடக்கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.ரகசியங்களை வெளியே கசியவிடக்கூடாது என்ற நிபந்தனையை மீறி, நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே வெளிநாடுகளில் பணம் சேர்த்தவர்களின் பெயர்களை வெளியிட்டால் மேற்கொண்டு எந்தவிதத் தகவலும் நமக்கு தரப்படாமல் போகக்கூடும்.வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணம் சேர்த்தவர்கள் மீது வழக்குத் தொடரும் வகையில் ஆதாரபூர்வமாகத் தகவல்கள் கிடைத்து வழக்கு தொடரும் நிலை வந்தவுடன் அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படும்.நம் நாட்டிலும் வெளி நாடுகளிலும் கறுப்புப் பணம் எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறும் புள்ளிவிவரம் என்று ஏதும் இல்லை.கணக்கில் காட்டப்படாமல் வெளிநாடுகளில் மறைத்து வைத்திருக்கும் பணத்தை எப்படி இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவருவது என்று ஆலோசனை கூற புதிய பணிக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.பாஜக குழு மதிப்பு: 2009-ல் பாரதிய ஜனதா கட்சி நியமித்த கறுப்புப்பண மதிப்பீட்டு பணிக்குழு 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் முதல் 1,40,000 கோடி அமெரிக்க டாலர்கள் வரையில் நம் நாட்டு கறுப்புப் பணம் வெளிநாடுகளில் இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டது.குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற தன்னார்வ அமைப்பு இந்த மதிப்பு 46,200 கோடி டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளது.இந்திய அரசு கடந்த 18 மாதங்களில் எடுத்த தீவிர நடவடிக்கைகளின் விளைவாக கணக்கில் காட்டப்படாத ரூ.15,000 கோடி கண்டுபிடிக்கப்பட்டது. அதே காலத்தில் சர்வதேச வரி இயக்குநரகம் எடுத்த நடவடிக்கைகள் மூலம் ரூ.34,601 கோடி வசூலானது.சரியான விலை நிர்ணயம் செய்யப்படாமல் நடந்த பண பரிமாற்றங்களை அதற்கான இயக்குநரகம் கண்டுபிடித்ததன் காரணமாக ரூ.33,784 கோடி இந்தியாவுக்கு வெளியே கடத்தப்படவிருந்தது உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது என்ற தகவல்களையும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்
Tuesday, January 25, 2011
இந்தியா கறுப்புப் பணத்தை வெளிக்கொணர 5 அம்ச உத்தி: பிரணாப் முகர்ஜி
கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர 5 அம்ச உத்தியை அரசு வகுத்திருப்பதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.1. கறுப்புப் பணத்துக்கு எதிராக உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்திய அரசும் சேருவது,2. கறுப்புப் பணத்தை வெளிக்கொணர உரிய சட்டங்களை இயற்றுவது,3. சட்ட விரோதமாக ஈட்டப்படும் வருவாயைக் கண்டுபிடிக்கவும் அவற்றைப் பறிமுதல் செய்யவும் உரிய துறைகளையும், ஏற்கெனவே உள்ள துறைகளில் புதிய பிரிவுகளையும் உருவாக்குவது,4. கறுப்புப் பணத்தை கண்டுபிடித்து கைப்பற்ற இயற்றிய சட்டங்களையும், ஏற்படுத்திய துறைகளையும் நன்கு பயன்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உரிய நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது,5. இந்தப் பணிகளை விரைவாகவும் சரியாகவும் செய்ய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பயிற்சிகளை அளிப்பது ஆகியவையே அரசின் 5 அம்ச உத்தியாகும் என்றார் பிரணாப் முகர்ஜி.கறுப்புப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடாதது ஏன்? சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தகவல்களைக் கோரிப் பெறவும் உரிய அமைப்பு ரீதியான ஏற்பாடுகளைச் செய்யாமல் வெளிநாடுகளிடமிருந்து, வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை சேமித்து வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றி கிடைத்த தகவல்களை வெளியிட முடியாது என்று முகர்ஜி விளக்கினார்.தகவல் பெற 23 நாடுகளுடன் ஒப்பந்தம்: கறுப்புப் பணம் குறித்து தகவல் பெறுவதற்காகவே, இரட்டை வரி விதிப்பை தடுக்கவும், வரி செலுத்தினார்களா என்று அறிய பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் 23 நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்று தெரிவித்தார்.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது பற்றிய தகவல்களை அறியவும் இரட்டை வரி விதிப்பை தடுக்கும் சட்டத்தின் கீழ் வராத இந்தியர்களைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்கவும் 63 நாடுகளுடன் இந்தியா பேசி வருகிறது என்றார்.சர்வதேச தரத்துக்கு ஏற்ப, இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் வகையில் 13 புதிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் நிலையில் தயாராகிவிட்டன.இந்தத் தகவல்கள் எல்லாமே, நடவடிக்கை பூர்த்தியாகும்வரை வெளியில் கசியவிடக்கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.ரகசியங்களை வெளியே கசியவிடக்கூடாது என்ற நிபந்தனையை மீறி, நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே வெளிநாடுகளில் பணம் சேர்த்தவர்களின் பெயர்களை வெளியிட்டால் மேற்கொண்டு எந்தவிதத் தகவலும் நமக்கு தரப்படாமல் போகக்கூடும்.வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணம் சேர்த்தவர்கள் மீது வழக்குத் தொடரும் வகையில் ஆதாரபூர்வமாகத் தகவல்கள் கிடைத்து வழக்கு தொடரும் நிலை வந்தவுடன் அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படும்.நம் நாட்டிலும் வெளி நாடுகளிலும் கறுப்புப் பணம் எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறும் புள்ளிவிவரம் என்று ஏதும் இல்லை.கணக்கில் காட்டப்படாமல் வெளிநாடுகளில் மறைத்து வைத்திருக்கும் பணத்தை எப்படி இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவருவது என்று ஆலோசனை கூற புதிய பணிக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.பாஜக குழு மதிப்பு: 2009-ல் பாரதிய ஜனதா கட்சி நியமித்த கறுப்புப்பண மதிப்பீட்டு பணிக்குழு 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் முதல் 1,40,000 கோடி அமெரிக்க டாலர்கள் வரையில் நம் நாட்டு கறுப்புப் பணம் வெளிநாடுகளில் இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டது.குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற தன்னார்வ அமைப்பு இந்த மதிப்பு 46,200 கோடி டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளது.இந்திய அரசு கடந்த 18 மாதங்களில் எடுத்த தீவிர நடவடிக்கைகளின் விளைவாக கணக்கில் காட்டப்படாத ரூ.15,000 கோடி கண்டுபிடிக்கப்பட்டது. அதே காலத்தில் சர்வதேச வரி இயக்குநரகம் எடுத்த நடவடிக்கைகள் மூலம் ரூ.34,601 கோடி வசூலானது.சரியான விலை நிர்ணயம் செய்யப்படாமல் நடந்த பண பரிமாற்றங்களை அதற்கான இயக்குநரகம் கண்டுபிடித்ததன் காரணமாக ரூ.33,784 கோடி இந்தியாவுக்கு வெளியே கடத்தப்படவிருந்தது உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது என்ற தகவல்களையும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment